சென்னை:

கொரோனா கொடுத்த அசுர அடி , வரும்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும் என்றும், ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இடை விடாமல் உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக் கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும்  கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போலிருக்கிறது.  இதனுடைய வலி வருங்காலங்களில் பலவிதங்களில் பல கடுமையான வேதனைகளைத் தரும்.

உங்களுடைய குடும்பத்தினரின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான் உங்களுடைய அடிப்படைக் கடமை. எந்தச் சூழலிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக்கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்.

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு எனக் கூறியுள்ளார்.