ஐசிசி ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 9 போட்டிகளின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 10 அணிகள் கலந்து கொள்ளும் போட்டிகள் இந்தியாவின் 9 நகரங்களில் நடைபெற உள்ளது.

அக்டோபர் 5 ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க இருக்கும் இந்த போட்டி தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அகமதாபாத்தில் அக்டோபர் 15 ம் தேதி நவராத்திரி விழா கொண்டாடப்பட இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அக்டோபர் 14 ம் தேதி மாற்றியுள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டியும் காளி பூஜை திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய தேதிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட போட்டிகளின் விவரம் :

அக்டோபர் 10: இங்கிலாந்து vs பங்களாதேஷ் – தர்மசாலா – காலை 10:30

அக்டோபர் 10: பாகிஸ்தான் vs இலங்கை – ஹைதராபாத் – பிற்பகல் 2:00

அக்டோபர் 12: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா – லக்னோ – மதியம் 2:00

அக்டோபர் 13: நியூசிலாந்து vs பங்களாதேஷ் – சென்னை – மதியம் 2:00

அக்டோபர் 14: இந்தியா vs பாகிஸ்தான் – அகமதாபாத் – பிற்பகல் 2:00

அக்டோபர் 15: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் – டெல்லி – பிற்பகல் 2:00

நவம்பர் 11: ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் – புனே – காலை 10:30

நவம்பர் 11: இங்கிலாந்து vs பாகிஸ்தான் – கொல்கத்தா – பிற்பகல் 2:00

நவம்பர் 12: இந்தியா vs நெதர்லாந்து – பெங்களூரு – மதியம் 2:00