சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:  செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரான பாஸ்கர பாண்டியன், அரசு கேபிள் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக சீர்த்துறை செயலாளராக சகாய மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக சரவண வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.