உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து மிமிக்ரி செந்தில் தலைமையில் “இனி ஒரு விதி செய்வோம்” என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பினர் சென்னை முழுதும் சாலையோரங்களில் மரம் நடுவதை லட்சியமாக கொண்ட செயல்படுகிறார்கள்.

அவ்வப்போது, பிரபலங்களை அழைத்து மரம் நடச் செய்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் வந்து, மரக்கன்றை நட்டார்.  பிறகு பேசிய அவர், “மரம்நடும் பணி மகத்தானது. அதை செய்துவரும் இந்த அமைப்பினரை மனதார பாராட்டுகிறேன்.

என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். பிற்காலத்தில் இதை விட பெரியதாக விவசாயம் செய்ய விரும்புகிறேன்” என்றார்.

அவரது வீடியோ..