சென்னை

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டு வருகின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சென்னை, ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவிர ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதைப் போல் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திடீர் சோதனை வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.