டில்லி:

த்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினரும், தொழிலதிபருமான ரதுல் புரியின்  ரூ.300 கோடி மதிப்பிலான பங்களாவை வருமான வரித்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

டெல்லியில் உள்ள ரதுல்புரியின் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புடைய ஆடம்பர சொகுசு பங்களா உள்பட ஏராளமான சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது விவிஜபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறு வனத்துடன் மத்திய அரசு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியாவை சேர்ந்த சிலருக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறு வனம் ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த முறைகேட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான கமல் நாத்தின் நெருங்கிய உறவினர் ரதுல் புரிக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் குற்றம்சாட்டி தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம்,  ரதுல் புரியின் ரூ.254 கோடி மதிப்புள்ள பினாமி பங்குகளை வருமான வரித் துறை கடந்த மாத இறுதியில் முடக்கியது.

இந்த நிலையில்,  ரதுல் புரியை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில்,  டெல்லியில் உள்ள ரதுல் புரியின் நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு மாளிகையை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இந்த சொகுசு மாளிகையின் மதிப்பு ரூ.300 கோடியாகும். பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டெல்லி சொகுசு மாளிகை முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான ரதுல்புரி  அங்கிருந்து தப்பி ஓடி விட்டது குறிப்பித்தக்கது.