சென்னை:  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என  மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியதாக  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 100 கோடியை தாண்டி தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்

சர்கள் டெல்லி வர அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று மாலை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தலைமையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதார துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர், கூட்டத்தில் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், நவம்பர் மாத இறுதிக்குள் 18 வயதை கடந்தவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியை அனைத்து மாநிலங்களும் செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டதாக கூறி உள்ளார்.

மேலும்,  இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.