சென்னை

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் கடைநிலை ஊழியர்கள்க்கு இனி 3 ஷிப்ட் பணி என அறிவிக்கப்பட்டுள்ளடு.

நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு (D Grade Employees) கீழ்க்காணுமாறு பணி நேரம் நிர்ணயித்து ஆணை வெளியிட உத்தேசித்து, அவ்வாறே ஆணையிடுகிறது.

  1. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை (1st shift)
  2. மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2nd shift)
  3. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3rd shift)

அதாவது, காலை 6 மணி முதல் மணி 2 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது ”

எனக் கூறப்பட்டுள்ளது.