சென்னை:

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் சிறிது தளர்வுகளுடன் தொழிற்சாலைகள், கடைகள், மதுபானக் கடைகளை திறக்க அரசு உத்தர விட்டுள்ளது.

இந்நிலையில், தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது :

ஆலைகளைத் திறக்கும்போது தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது . அப்படி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.