சென்னை

பாஜகவை எதிர்த்துக் கோஷமிட்டதற்காகத் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி கைது குறிதது மனித உரிமை ஆணையம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் வருடம்  அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் செய்தார்.  அவரை தூத்துக்குடி விமான நிலையத்தில் பார்த்த சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராகக் கோஷமிட்டார்.

இதையொட்டி  தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவுக்கு எதிராகக் கோஷமிட்ட சோபியா மீது விமான நிலைய அதிகாரிகளிடம்  தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். காவல்துறையினர் சோபியாவை கைது செய்தனர். மாநில மனித உரிமை ஆணையம் இந்த கைது தொடர்பாக விசாரணை நடத்தியது.

இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  தீர்ப்பில் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாஜகவை விமர்சித்ததாக மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என்று மனித உரிமை ஆணைய நீதிபதி கூறினார். இந்த மனித உரிமை மீறலுக்காக  மாணவி சோபியாயின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.