சென்னை: மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் என்றும் அதன் வெள்ளி விழா நிகழ்ச்சியில்  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழா வில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின்  மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை  மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட திருவள்ளூர், கன்னியா குமரி, தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் , ம மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டி.செந்தில்குமார் இ.கா.ப., அவர்களுக்கு  முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில், பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் 1997-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் மனித உரிமை ஆணையத்தை அமைத்தவர். உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகள் காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம் என கூறியதுடன்,  மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட வேண்டும் என்றும் இவ்விழாவில் கோரிக்கை விடுத்தார்