கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகின்றது. பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களைப் பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இக்கு இயங்கி வருகிறது.

நேற்று இரவு இந்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் இதனால் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை பரவத் துவங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர்.    இதுவரை தீயினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வரவில்லை.