பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், கதை சொல்லட்டுமா டாஸ்கின் போது நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு ஆக்டிவிட்டி ஏறியாவிற்கு வந்தவர்கள் அடிப்படையில் ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக் பாஸ் அறிவித்தார். மேலும் இந்த வீட்டில் ஜொலித்தவர் யார் என்ற தேர்வு நடைபெற்றதில் இமான் வெற்றி பெற்றதால் அவரும் இந்த டாஸ்கில் பங்கேற்பார் என பிக் பாஸ் அறிவித்தார்.

சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, இந்த வாரம் இரண்டு, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

போட்டியில் நாணயத்தை எடுக்கும்போது மாட்டிக்கொண்ட நிரூப் பிரியங்கா சுருதி ஆகியோர் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.நாணயத்தை ஒருவர் கைப்பற்றுவதும் அவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதும் அவரிடமிருந்து வேறு ஒருவர் கைப்பற்றுவதும் மற்றும் காரசாரமான விவாதங்கள் என நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

முதல் ப்ரோமோ : அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, யார் இங்கே நெருப்பு என பேசிக் கொள்கிறார்கள். அப்போது சிபி, “என்னை நான் நெருப்பா பாக்குறேன், யாராச்சும், கை விட்டு, கால் விட்டு பாக்கணும்ன்னு நினைச்சாங்கனா சுட்டுடுவேன்” என்கிறார். பின்னர் பேசும் தாமரை, “அண்ணாச்சியை நெருப்பா பாக்குறேன். ஏன்னா நல்லா காமெடி பண்ணுவாங்க. எந்த நேரம் அந்த குணம் மாறுதுனே தெரியாது” என்கிறார். பின்னர் பேசும் இமான் அண்ணாச்சி, ‘அபிஷேக்கை நெருப்பா பாக்குறேன். ஏன்னா அவர் கொளுத்தி போடுறது மாதிரி தெரியுது’ என்று கூற, அப்போது ‘அபிஷேக்கை பத்தி சொன்னது எனக்கு தவறா தெரியுது” என்கிறார் சிபி.

இரண்டாவது ப்ரோமோ : அதில் பாவ்னி, மற்றும் மது அமர்ந்திருக்கின்றனர், அங்கு வரும் அபிஷேக் டாப் ஐந்து போட்டியாளர்களில் நீ, நான் இருக்க வேண்டும், எக்காரணத்தை கொண்டும் வருணை வர விடக்கூடாது என்கிறார். அதன்பின்னர் வருணிடம் சென்று உன்னை கடைசி வரை ஹாலில் விட மாட்டார்கள், எனவே ஹாலை டார்கெட் பண்ணு என்கிறார். அதன்பின்னர் பாவ்னியிடம் வந்து, நான் பேசியே அங்கு சென்று விடுவேன் என என்னிடம் வருண் சவால் விடுகிறான், என்னை பொறுத்தவரை அந்த நாணயம் வருணிற்கு சென்று விடக்கூடாது என பாவ்னியிடம் கூறுகிறார்.

மூன்றாவது ப்ரோமோ : அபிஷேக் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் மாற்றி மாற்றி பேசி அவர்களுக்குள் கொளுத்திப் போட முயற்சிக்கும் ப்ரோமோ வெளியான நிலையில், சற்றுமுன் அபிஷேக்கை மற்ற போட்டியாளர்கள் பந்தாடும் புதிய ப்ரோமோ வெளியானது.