சென்னை

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு  ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.    ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக விலை உயராமல் இருந்தது.

இதைப் போல் மாதத்துக்கு ஒருமுறை  எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வந்தது.   ஆயினும் ஒரு சில மாதங்களில் இரண்டு மற்றும் மூன்று முறை கூட எரிவாயு விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வந்தது.    தேர்தல் காரணமாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது    சென்னையில் ரூ.917க்கு விற்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.50 விலை உயர்ந்து ரூ.967க்கு விற்பனை ஆகிறது.   இது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.