மைசூரு

மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு தரவேண்டிய ரூ.80 லட்ச்ம் பாக்கிக்கு ஓட்டல் நிர்வாகம் கெடு வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் தேசிய புலிகள் காப்பகத்தில் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மோடி பொன்விழாவில் பங்கேற்றதுடன், பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்த்து வனவிலங்குகள், பறவைகளை தனது கேமராவில் படம் பிடித்தார்.

இதையொட்டி பிரதமர் மோடி, மைசூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அவருடன் வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த ஓட்டலில் தங்கியிருந்தனர். விழா கொண்டாட்ட திட்டத்திற்கான செலவு ரூ.6 கோடி ஆகும். முதலில் இந்த நிகழ்ச்சிக்கான தொகை ரூ.3 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. பிறக் கூடுதல் நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டதால் செலவு தொகை ரூ.6.33 கோடியாக மாற்றப்பட்டது. இதுவரை ரூ.3 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, வனத்துறை அதிகாரிகள், பாதுகாவலர்கள் மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியதற்கான கட்டண தொகை ரூ.80 லட்சம் ஆகும். ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை ஓட்டலில் தங்கியதற்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

வனத்துரை பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் தங்கியதற்கான செலவுகளை மாநில அரசு தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே கர்நாடக அரசு தான் ஓட்டலுக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அயினு இதுவரை கர்நாடக அரசு ஓட்டலுக்கான பாக்கி தொகையை செலுத்தவில்லை

மைசூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் நிர்வாகம், கர்நாடக வனத்துறைக்கு எழுதிய கடிதத்தில்,

“எங்கள் ஓட்டலில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சலுகைகளை பயன்படுத்தியதற்காக கட்டணம் ரூ.80 லட்சம் செலுத்த வேண்டும். ஓராண்டாக அந்த கட்டண பாக்கியை செலுத்தாமல் இருப்பதால், 18 சதவீத வட்டியுடன் ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் செலுத்த வேண்டும். வருகிற 1-ந்தேதிக்குள் இந்த தொகையை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்”

என்று கூறப்பட்டுள்ளது.

இது கர்நாடக அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தங்கிய பிரபல நட்சத்திர ஓட்டலின் கட்டண பாக்கி விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.