பெங்களுரு

பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் ஓசூர் எம் எல் ஏ பிரகாஷின் மகன் கருணா சாகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.

கடந்த 2016 ஆம் வருடம் தமிழகத்தில் ஓசூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஒய்  பிரகாஷ் வெற்றி பெற்றார்.   இவரது மகன் பெயர் கருணா சாகர் ஆகும்.   இன்று அதிகாலை பெங்களூருவில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பெங்களூரு நகரில் கோரமங்களா பகுதியில் ஏற்பட்டுள்ளது.  இங்குச் சொகுசுக் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி உள்ளது.  இந்த விபத்தில் 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.

உயிர் இழந்தவர்களில் திமுகவைச் சேர்ந்த ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணா சாகரும் ஒருவர் ஆவார். மேலும் கருணா சாக்ரின் மனைவியும் பிரகாஷின் மருமகளுமான பிந்து என்பவரும் இந்த விபத்தில் உயிர் இழந்துள்ளார்.