டெல்லி: நாடு முழுவதும்கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ளது.இதனால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பகுதி நேர ஊரட்ங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தி வருவதுடன், மகாராஷ்டிரா,  டெல்லி, கர்நாடக மாநிலங்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக,   மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.

சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

சுகாதார சேவைகள், போலீஸ், தீயணைப்பு, வங்கி, மின்சாரம், குடிநீர், தூய்மை பணி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.

ரயில், மெட்ரோ ரயில், பேருந்து, வாடகை கார்களில் 50 சதவீத பயணிகளை அனுமதிக்கலாம்.

அரசு, தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

திருமணத்தில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பெரிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், மதுபான பார்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆன்மிக தலங்களை மூடலாம்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்தலாம்.

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான சரக்கு போக்கு வரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது.

உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

கொரோனா தொற்று வல் அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சேவையாற்ற தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரை பயன்படுத்தலாம்.

ஒரு பகுதியானது ஒரு வாரத்திற்குள்  10 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா தொற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி சிகிச்சை 60 சதவிகிதத்தை  தாண்டினாலோ, அந்த பகுதியில்  ஊரடங்கு அமல்படுத்தலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.  அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

ஒரு பகுதியில் 14 நாட்கள் வரை கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம்.

வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண் டும். காய்ச்சல் அறிகுறிகள் உள்ளோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும். தற்காலிக மருத்துவமனைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும்.

வீட்டில் சிகிச்சை பெறு வோருக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய கூடாது என்பன குறித்த துண்டு பிரசுரத்தை வழங்க வேண்டும்.

முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளை கரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை அனைத்து மாநில அரசு களும் விரைவுபடுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங் கிணைக்க மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்படுவோரில் 98 சதவீதம் பேர் குணமடைந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.