ந்திர பிரதேச மாநிலத்தின் எம்ஜிஆர் என அழைக்கப்பட்டவரும், தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ், தனது இளமைக்காலத்தில் சேலம் அருகே உள்ள வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணி புரிந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் தனி சகாப்தமாக விளங்கியவர் என்.டி. ராமராவ். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தெலுங்கு தேசம் என்ற கட்சியினைத் தொடங்கி ஆந்திராவில் அரியணை ஏறியவர். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக தமிழகஅரசின் பதிவுத்துறையில் அரசுப் பணியாற்றி வந்துள்ளார்.
சேலம் அருகே உள்ள வாழப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அவர் சார்பதிவாளராக பணியாற்றி  இருப்பதாக கவிஞர் பெரியார் மன்னன் தெரிவித்து உள்ளார்.
அது தொடர்பான வீடியோ…

நன்றி: கவிஞர்.பெரியார் மன்னன்