இந்து மத வழிபாட்டு நடைமுறைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மகா சபா சார்பில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாகவே விஜய்சேதுபதியின் பேச்சுகள் சர்ச்சையாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17.3.2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

அதில் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக இப்புகாரில் குறிப்பிட்டுள்ளனர் .
குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி என்பது தான் அந்நிகழ்ச்சியில் நோக்கம் . ஆனால் விஜய்சேதுபதி தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்டத் தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடைமாற்றும் நிகழ்வை காட்டக் கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனையாக சொல்லுவது போல் மதநம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளார் என அப்புகாரில் கூறியுள்ளனர் .