சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து அறிவிப்புகள வெளியாகி வருகின்றன.

இந் நிலையில் இமாச்சல பிரதேச அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும். எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 64,420 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.