மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

ஆனாலும் கொரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந் நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மகாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதேசமயம் மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.