சென்னை: ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க, தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளது.

ஊரடங்கு நாட்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக வழங்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

அரசு சரியான செயல்படாத சூழலில், கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் விசாரணைக்கு வந்த வழக்கில், ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்க வேண்டும் எனில், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தால் போதும்; அனுமதி பெறவேண்டிய தேவையில்லை.

ஆனால், விநியோகிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவினை நீதிபதிகள் பிறப்பித்தனர்.