சென்னை:

சென்னையில் வாழும் பொதுமக்கள் மழை பாதிப்பு உதவி கோர, ஐஏஎஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.  அடையாறு, பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் மீட்பு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொழில்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில், மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஒரு கண்காணிப்பு அலுவலரை அரசு நியமித்துள்ளது. இதில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதிப்பால் அவதியுறும் மக்கள் கீழ்க்குறிப்பிட்ட எண்களில், அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

திருவொற்றியூர் மண்டலம்: கே.நந்தகுமார் (7550225801)

மணலி மண்டலம்: மரியம் பல்லவி பல்தேவ் (7550225802)

மாதவரம் மண்டலம்: சந்தோஷ் பாபு (7550225803)

தண்டையார்பேட்டை மண்டலம்: டி.என்.வெங்கடேஷ் (7550225804 )

ராயபுரம் மண்டலம்: பி.உமா நாத் (7550225805)

திரு.வி.க. நகர் மண்டலம்:சி.காமராஜ் (7550225806)

அம்பத்தூர் மண்டலம்:எம்.பாலாஜி (7550225807)

அண்ணாநகர் மண்டலம்:ஆர்.நந்தகுமார் (7550225808)

தேனாம்பேட்டை மண்டலம்: ஆர்.செல்வராஜ் (7550225809)

கோடம்பாக்கம் மண்டலம்:சி.விஜயராஜ்குமார் (7550225810)

வளசரவாக்கம் மண்டலம்: ஆர் கிர்லோஷ் குமார் (7550225811)

ஆலந்தூர் மண்டலம்: கிரண் குர்ராலா (7550225812)

அடையாறு மண்டலம்: மைதிலி கே.ராஜேந்திரன் (7550225813)

பெருங்குடி மண்டலம்: ஆர்.பழனிச்சாமி (7550225814)

சோழிங்கநல்லூர் மண்டலம்: தாரேஸ் அகமது (7550225815)

மாநகராட்சி தலைமை இடம்: அனு ஜார்ஜ் (7598960125)