சென்னை:

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும்படி கண்டக்டர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த கண்டக்ரை தமிழக அரசு கவுரவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

பேருந்து புறப்பட்டதும் பயணிகள் முன்பு வந்த கண்டக்டர், தனக்கு பணி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துடன்,  பேருந்தை சுத்தமாக வைத்திருக்க பயணிகளிடம் வலியுறுத்தியவர் தாங்கள் சாப்பிடும் பொருட்கள், பேப்பர் போன்றவற்றை பஸ்சினுள் போடாமல், அதற்குரிய இடத்தில் போடுமாறு அறிவுறுத்துகிறார்… கண்டக்டரின் பேச்சை பயணிகள் கைதட்டி வரவேற்பு செய்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கண்டக்டரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.