புதுக்கோட்டை:
ரூ. 600 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய நிறுவனத்தில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி 600 கோடி ரூபாய் மோசடி செய்த எம்ஆர் கணேஷ் மற்றும் எம்ஆர் சுவாமிநாதன் ஆகியோரை காவல்துறையின் கடந்த ஒருவாரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த எம்ஆர் கணேஷ் மற்றும் எம்ஆர் சுவாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற காவல துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை இன்று இரவு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.