சென்னை:
சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப் பெற்று உள்ளது.இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.