சென்னை

ற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. வரும் 16 ஆம் தேதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும்.

இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை , மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, வேளச்சேரி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.