டில்லி,

மிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தென்கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தொடங்கியது. அதன் காரணமாக  தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

தற்போது கடந்த 10 நாட்களாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது மீண்டும்  அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால்,  அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கிறது.

இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிற 26-ந் தேதி தென் மேற்கு வங்க கடல் (தமிழகம் கடலோரம்) மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.