சென்னை:
மிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண் டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ய்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.