சென்னை:
ள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும் என்றும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் பள்ளி தொடங்கும் போதும் முடியும் போதும் மாணவர்கள் சாலையை கடக்க ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வன்முறை, சத்துணவில் பல்லி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை, பற்றாக்குறை,மாணவர் சேர்க்கை மற்றும் உள்ளூர் விடுமுறை விடுதல் உள்ளிட்டவற்றை சிஇஓ அனுமதி பெற்ற பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.