சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

அகிம்சை சோசலிஸ கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஹ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் என்பவர் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,

“பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சியின் சின்னமாக ஒதுக்கியது அநீதி ஆகும். இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது போல உள்ளது. அதனால்,பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று செப்டம்பர் மாதம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவைப் பரிசீலிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”

என்று கோரியிருந்தார்.

நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில்,

 “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும், தாமரையை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. அதனால், தாமரையை அரசியல் சின்னமாக ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறாகும்”

என்று வாதிடப்பட்டது.

இந்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.