மும்பை: பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் டிவிட் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். மேலும்,’ எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க விரும்புகிறோம்’ என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவரது மனைவி பெயர் ஹேசல் கீச். இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இந்த நிலையில், யுவராஜ்சிங் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது.  இதை யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பாக வராஜ் சிங்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையைப் பரிசாக அளித்துள்ளார் என்பதை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் குழந்தையை உலகிற்கு வரவேற்கும் போது எங்கள் தனியுரிமையையும்  நீங்கள் மதிக்க விரும்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.