சென்னை:

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 மெயின் தேர்வுக்கான  ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாக அறிவித்து உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 1.1.2019 அறிவிப்பின்படி, குரூப் 1 பதவிக்கான முதன்மைத்தேர்வு வருகின்ற 12, 13, 14 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் உள்ள 95 தேர்வுக்கூடங்களில் முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது.

முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.netல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.