சென்னை: குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது.

குரூப்-1 தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் எதிரொலியாக தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உதவி ஆட்சியர் , துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 இடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.