பிரபல உணவகமான சரவணனபவனில், சாப்பாட்டில் இறந்த வெட்டுக்கிளி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியராக பணிபுரிபவர் நெறியாளர் செந்தில் வேல். நேற்று இவர் தனது முகநூல் பதிவில், “உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள  ஓட்டல் சரவண பவனில் ) இன்று நான் சாப்பிடச் சென்றபோது சட்னியில் வெட்டுக்கிளி..
சமீபகாலமாகவே அதன் சேவை மற்றும் தரம் மிக மோசமாகவே உள்ளது” என்று அதிர்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

செந்தில்வேல்

இது குறித்து செந்தில் வேலை தொடர்புகொண்டு பேசியபோது, சென்னை ஈக்காடுதாங்கல் சரவணபவன் உணவகத்தில் சாப்பிட்ட போதே, சட்னியில் வெட்டுக்கிளி இறந்து கிடந்ததாக தெரிவித்தார். மேலும் இது குறித்து உணவக நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்ததாகவும், அவர்கள் வேறு உணவு அளிப்பதாகக் கூறியும் மறுத்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

சாப்பாட்டில் செத்துப்போ வெட்டுக்கிளி

சமீபகாலமாகவே சரவணபவன் உணவங்கள் மீது பல்வேறு புகார்கள் வெளியாகி வருகின்றன.

போலி ஆவணம் தயாரித்து ஓட்டல் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய வழக்கில் சரவணபவன் உணவக  இயக்குனர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு அமெரிக்கா செல்ல  அமெரிக்க தூதரகம் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.

செந்தில்வேல் முகநூல் பதிவு

வாகன நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்காமல் செயல்பட்ட சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சரவணபவன் உணவக கிளை சீல் வைக்கப்பட்டது.

சென்னை கேகே நகரில் செயல்பட்டு வந்த சரவண பவன் கிளை கட்டிடம்,  சி.எம்.டி.ஏ. அனுமதி இன்றி கட்டப்பட்டதாக  சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் உணவில் இறந்த வெட்டுக்கிளி கிடந்த சம்பவம் நடந்துள்ளது.