சென்னை:
கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெற கோவிட் உதவி மையங்கள் 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

கோவிட்-19 உதவி மையங்களின் எண்கள்:

1 அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 94999 66103

2 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 78258 84974

3 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 044-2836 4964 044-2836 4965

4 அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 044-2528 1350

பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் பிரகாஷ், கேட்டுக்கொண்டுள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.