டலூர்

மிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா. .ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்..

அவர் தனது உரையில்,

“தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இங்குச் சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு தலைதூக்கிவிட்டது என்றால், வேங்கை வயலில் குடிநீரில் மலத்தைக் கலந்துள்ளார்கள், மேலும்  நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனை மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டியுள்ளார்கள்.

பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் தங்கள் கைகளில் சாதி அடிப்படையில் கயிறுகளைக் கட்டிக்கொள்கின்றனர். என்ன மாதிரியான கலாச்சாரம் இது?  கிராம பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற பெண் இந்துமதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அவரால் பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

சுமார் 7% குற்றவாளிகள் மட்டுமே பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டிக்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை.”

எனத் தெரிவித்துள்ளார்.