தஞ்சை:

திர்ப்பு காரணமாக தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்த இருந்த கழிவறை ஆய்வு ரத்து செய்யப்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால், அரசுப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடலூரில் ஆய்வு செய்ய வருகை தந்த ஆளுநருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அங்கு ஆய்வு செய்து முடித்தார் ஆளுநர்.

இந்த நிலையில் இன்று தஞ்சையில் ஆளுநர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த நிலையில் தஞ்சை பிள்ளையார் பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வரும் கழிவறையை ஆய்வு செய்ய இருந்த ஆளுநரின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.