சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், திராவிடம் என்ற வார்த்தைகளை பேசாமல் தவிர்த்த நிலையில், அதற்கு,  எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இடையிலேயே கவர்னர் ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் சபையில், கவர்னர் எதிரான வந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  கோஷமிட்ட எம்எல்ஏக்களை தடுக்க வேண்டிய சபாநாயகர் அமைதியாக இருந்தார்.

இதற்கிடையில் தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், ஆளுநர் உரையில் இருந்த  திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற வாக்கியம் இடம்பெறிருந்த நிலையில், உரையாற்றும்போது அதனை பேசாமல் தவிர்த்துள்ளார்.

2 மற்றும் 3 பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார். இதேபோல் 46ம் பக்கத்தில் இருந்த ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்துள்ளார்.

மாநில அரசு எழுதி கொடுத்ததை வாசிக்க வேண்டிய ஆளுநர், அதை முறையாக வாசிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்து சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஆளுநர் உரையை தமிழில் வாசித்த சபாநாயகர் அந்த வார்த்தை வாசித்தார். அப்போது, முதல்வரின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து ஆளுநர், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளியேறினார்.

ஆளுநர் உரை முடிந்ததும்,  சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வரின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து ஆளுநர், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளியேறினார்.

அப்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கூறினார். மேலும், அரசு தயாரித்து கொடுத்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் ஆகும். ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம்” “எங்கள் கொள்கைக்கு மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே மாறாக ஆளுநர் நடந்து கொண்டார்” அரசின் உரையை முழுமையாக படிக்காதது சட்டமன்ற மரபை மீறிய ஒன்று.

எனவே, இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதேபோல் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.  இந்த தீர்மானங்களை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்

முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்துகொண்டிருந்தபோது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு,  அரசியல் அமைப்புச் சட்டத்தினை இயற்றிய அம்பேத்கரின் பெயரினைக்கூட ஆளுநர் வாசிக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  ஆளுநரிடம் கடந்த 5ஆம் தேதி உரை வழங்கப்பட்டது, 7ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்தார். ஆனால் உரையில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து ஆளுநர் முன்கூட்டியே எதுவும் கூறவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் அவையில் இருக்கும்போது அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது மரபல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தினை இயற்றிய அம்பேத்கரின் பெயரினைக்கூட ஆளுநர் வாசிக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் கடந்த 5ஆம் தேதி உரை வழங்கப்பட்டது, 7ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்தார். ஆனால் உரையில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து ஆளுநர் முன்கூட்டியே எதுவும் கூறவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் – கவர்னர் அருகே கோஷமிட்ட எம்எல்ஏக்கள்… பரபரப்பு