சென்னை:

ரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும்  11 மற்றும் 12ம் தேதிகளில் தொடங்குவதாக  பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியருகளுக்கான பணியிற்ற மாற்றத்திற்கபான  கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைப்பெற்று வருகிறது இந்த ஆண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு  வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தொடங்கு வதாகவும்,.  நடப்பு கல்வியாண்டிற்கான பணியிட மாறுதல் விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணங்களைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதல் கோரிய விண்ணப்பங்கள் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து,  தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 11-ந்தேதி  தொடங்கப்பட இருப்பதாகவும், மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 12-ந்தேதி தொடங்கி  ஜூன் 21 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!