சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த 20 பேர் இன்று மாலை வீடு திரும்ப உள்ளார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்  சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில்,  வீடு வீடாகவும் சென்று கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் நேற்று  30 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மேலும் 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவீட்டுக்கு அனுப்பட இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்து உள்ளார்.