சென்னை,

மிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது. அவர் குற்றவாளி என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக குற்றவாளியின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக்கூடாது, உடனே அதை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை  நீதிபதி ரமேஷ் ,நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதைத் தொடர்ந்து,  தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கை வரும் மார்ச் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.