சென்னை: தமிழ்நாட்டில் நவீன தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு குறித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கைக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக் கொள்கையை வகுத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்கொள்கையின்யின்படி,  வலுவான, பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மேலும்,  கிராமப்புறங்களில் மொபைல் தொலைத்தொடர்பு சேவையை அதிகரிப்பது, மலிவு, உயர்தர தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை வழங்குதல், அதிவேக மற்றும் உயர்தர பிராட்பேண்ட் சேவையை வழங்க, இந்த கொள்கை உதவும். பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத்தொடர்பு தளங்களை ஏற்றுக்கொள்வது இந்த கொள்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்களுக்கு ஏற்ற தொலைத்தொடர்பு தளங்களை கட்டமைப்புடன் ஏற்றுவது இக்கொள்கையின் நோக்கம் ஆகும். அதன்படி, மொபைல்ட்டவர் நிறுவினால் விண்ணப்பத்திற்கு ஒருமுறை திரும்ப பெறாத கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும். அண்டர்கிரவுண்ட் டெலிகிராப் கட்டமைப்பை அமைக்க ஒரு விண்ணப்பத்திற்கு கி.மீ-க்கு ரூ.1,000 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.