சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்தக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்-7ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று  நாடாளு மன்ற விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. மொத்தம் 17 பணி நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும்  என தெரிவிக்கப்பட்டுள்ள இதையொட்டி,  டிசம்பர் 6-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவம் வகையிலும், தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் , எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களுக்கு  மத்தியஅமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ந்தேதி தொடக்கம்! மத்தியஅரசு தகவல்…