சென்னை:

பிப்ரவரி 27-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் மீது 25,26 தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், மேலும் பிப்ரவரி-ல் சித்த வைத்தியர் சிவராஜ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து சனிக்கிழமை அரசு அலுவலங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.