துரை

யூ டியூபில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனக் கூறப்படுகிறது.

மதுரையில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி திருப்பூரில் வசித்டு வருகிறார்..  இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும், ‘யுடியூப்’ சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.  தனது வீடியோவில் தனக்கு வேண்டாதவர்களைத் தாறுமாறாகத் திட்டியும், ஆபாசமாகப் பேசியும் வீடியோ வெளியிடு வந்தார்.

மேலும் ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கை ஆகும்.   ரவுடி பேபியின் நண்பரான சிக்கந்தர்ஷாவும், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இந்த வீடியோக்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் இருவரையும் சைபர் கிரைம் காவல்துறை, மதுரையில் இருந்த இருவரையும் கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ள இவர்கள் மீது ஏராளமான புகார்கள் வந்து பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.  எனவே இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.