புதுடெல்லி: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று கணித்துள்ளார் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களை ஆடவுள்ளது. முதலில், டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. முதல் 2 போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், அடுத்த 2 போட்டிகள் அகமதாபாத் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து கெளதம் கம்பீர் கூறியுள்ளதாவது, “இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில்கூட இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பலமாக உள்ளது.

இலங்கையில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்தியாவின் பும்ரா மற்றும் அஸ்வின் போன்றவர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கோப்ப‍ையை வெல்ல வாய்ப்புள்ளது. பகலிரவு டெஸ்ட்டை பொறுத்தமட்டில், அப்போட்டி டிராவில் முடியலாம்” என்று கணித்துள்ளார் கம்பீர்.

ஆஸ்திரேலியாவில், மிகவும் கடினமான ஒரு சூழலில் டெஸ்ட் தொடரை வென்றபிறகு, இந்திய அணியின் தன்னம்பிக்கை பெரியளவில் அதிகரித்துள்ளதாக கிரிக்க‍ெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.