சென்னை: கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு கிடைத்ததையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்.

இரு அணி வீரர்களும், முதற்கட்டமாக ஹோட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த சமயத்தில், அவர்களுக்கு 3 முறை  மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகடிவ் முடிவு வந்தது.

இதனையடுத்து, பிப்ரவரி 1ம் தேதி முதல், இரு அணியினரும், சேப்பாக்கம் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியினரைப் பொறுத்தவரை மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியினரும் தங்களின் பயிற்சியைத் துவக்கியுள்ளனர். இதனிடையே, இலங்கை செல்லாமல், நேரடியாக இங்கிலாந்திலிருந்து, சென்னை வந்திறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மற்றும் பர்ன்ஸ் உள்ளிட்ட வீரர்களும், தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, தங்களுக்கான பயிற்சியைத் துவக்கியுள்ளனர்.