நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள் .

ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம்.

ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின் வழக்கம். அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் தொகையை பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம்.

கடந்த சீசனில் கவின் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். இந்த சீசனில் கேபி 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக ரசிகர்கள் முன்பு லைவ் வந்துள்ளார். அப்பொழுது ரசிகர்களுக்கு மனமுருகி நன்றி செலுத்தினார். அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுக்கு பாலாவை பிடிக்குமா’ என்று கேட்டதற்கு, “நிச்சயமாக எனக்கு பாலாவை பிடிக்கும். நீங்கள் கொடுத்த அன்பை மனதில் வைத்து நான் மென்மேலும் முன்னேறுவேன். பிக்பாஸ் வீட்டில் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.