சென்னை:
நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் முழு ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.